×

சுரங்க விபத்தில் 6 பேர் பலி

கோஹிமா: நாகலாந்தின் வோகா மாவட்டத்தில் உள்ள ரிச்சன்யன் கிராமத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகின்றது. இந்த சுரங்கத்திற்குள் நேற்றுமுன்தினம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 6 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நிலக்கரி சுரங்கத்தில் வேலை செய்தவர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.

The post சுரங்க விபத்தில் 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : accident ,Richanyan ,Nagaland's Woga district ,Dinakaran ,
× RELATED மின்விளக்குகள் எரியாத புதிய மேம்பாலம்: பெரியபாளையம் அருகே விபத்து அபாயம்